Maalai Neram

Album cover art for "Maalai Neram" by G.V. Prakash Kumar

G.V. Prakash Kumar - Pop, Indian Pop

Maalai Neram

0 Plays

Duration: 5:57

View ArtistView Album

Lyrics

Language:

[பாடல் வரிகள் - "மாலை நேரம்" - ஜி.வி. பிரகாஷ் குமார், ஆண்ட்ரியா ஜெரேமியாஹ்] [Chorus] மாலை நேரம், மழை தூறும் காலம் என் ஜன்னல் ஓரம், நிற்கிறேன் நீயும் நானும், ஒரு போர்வை குள்ளே சிறு மேகம் போலே, மிதக்கிறேன் ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள், தொடர்கிறதே இது தான் வாழ்க்கையா, ஒரு துணை தான் தேவையா மனம் ஏனோ என்னையே, கேட்கிறதே [Post-Chorus] காதல் இங்கே ஓய்ந்தது, கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது, அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம், நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம், அன்பே இதம் தருமே... [Verse 1] உன் கரம் கொற்கையில், நினைவு ஓராயிரம் பின் இரு கரம் பிரிகையில், நினைவு நூறாயிரம் காதலில் விழுந்த இதயம், மீட்க முடியாதது கனவில் தொலைந்த நிஜங்கள், மீண்டும் கிடைக்காதது ஒரு காலையில் நீ இல்லை, தேடவும் மனம் வரவில்லை பிரிந்ததும் புரிந்தது, நான் என்னை இழந்தேன் என [Post-Chorus] காதல் இங்கே ஓய்ந்தது, கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது, அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம், நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம், அன்பே இதம் தருமே... [Verse 2] ஒரு முறை வாசலில், நீயாய் வந்தால் என்ன நான் கேட்கவே துடித்திடும், வார்த்தை சொன்னால் என்ன இரு மனம் சேர்கையில் பிழைகள், பொறுத்து கொண்டால் என்ன இரு திசை பறவைகள் இணைந்து, விண்ணில் சென்றால் என்ன என் தேடல்கள் நீ இல்லை, உன் கனவுகள் நான் இல்லை இரு விழி பார்வையில், நாம் உருகி நின்றால் என்ன [Chorus] மாலை நேரம், மழை தூறும் காலம் என் ஜன்னல் ஓரம், நிற்கிறேன் நீயும் நானும், ஒரு போர்வை குள்ளே சிறு மேகம் போலே, மிதக்கிறேன் ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள், தொடர்கிறதே இது தான் வாழ்க்கையா, ஒரு துணை தான் தேவையா மனம் ஏனோ என்னையே, கேட்கிறதே [Post-Chorus] காதல் இங்கே ஓய்ந்தது, கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது, அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம், நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம், அன்பே இதம் தருமே... [Outro] இதம் தருமே...

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • G.V. Prakash Kumar
  • Selvaraghavan