Neeye unku raja - Thungaa vanam

Lyrics
நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா!! அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை ரெண்டு கண்களும் தூங்காவனம்! புயல் வேளையில், கடல் தூங்குமா அதுபோல் இவன் தூங்காவனம்! எந்த பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா! எந்த துக்கமும் உனக்கு தடையே இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா! நீயே உனக்கு ராஜா! உனது தலையே உனது கிரீடம் தோழா! தீயாய் எழுந்து வாடா! திசைகள் கடந்தும் பயணம் போடா போடா! வேலை வீசியே வாளை ஏந்தியே வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது! ஜீவ ஜோதியாய் நீயும் மாறினால் அழிவே கிடையாது! உன் கொள்கை வெல்லும் அதுதான் தூங்காவனம் தோல்வி என்பதே ஞான வெற்றிதான் தொழிந்தால் கடல்களும் தொடை அளவே உள்ளம் என்பது என்ன நீளமோ அதுதான் உனதளவே! இது துள்ளும் உள்ளம் அது தூங்காவனம்! நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா! தீயாய் எழுந்து வாடா! திசைகள் கடந்தும் பயணம் போடா போடா! அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை ரெண்டு கண்களும் தூங்காவனம்! புயல் வேளையில், கடல் தூங்குமா அதுபோல் இவன் தூங்காவனம்! எந்த பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே முன்னேன்றம் உனதே நண்பா! எந்த துக்கமும் உனக்கு தடையே இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா! நீயே உனக்கு ராஜா! உனது தலையே உனது கிரீடம் தோழா! தீயாய் எழுந்து வாடா! திசைகள் கடந்தும் பயணம் போடா போடா!
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Writers
- Vairamuthu